இறுதி மூச்சு வரை

தீனாருக்கும் திர்கத்துக்கும் இடையில்
இழு படுகிறவனே!
எழுந்து வா!
இடிந்து கொண்டிருக்கிற
 ஏகத்துவ வீட்டை உற்றுப் பார்
உழுத்துப்போன பணப் புரோகிதத்திற்க்;கு
இனியும் உத்தரவாதம்மில்லை.
தவ்ஹீதைப் பற்றி அக்கறை அற்றவர்களும்
பதவி மோக சுய நலமிகளும்
தமக்குக் கொமிசன்
அல்லது நிர்வாகப் பதவி
கிடைப்பதற்காய்  அல்லாஹ்வின் தீனையே
குராபிகளிடம் அடகு வைப்பவர்களும்
விவாதத்திற்கஞ்சி முகம் சுழிப்பவர்களும்
அடிப்பபடையில் குராபிகளாகவும்
சில போது ஜமாஅத்தே இஸ்லாமியாகவும்
பேரலவில் மட்டும்
தவ்ஹீத் வாதிகளாகவும் இருப்பவர்களும்
அத்திபாரம் தொடக்கம் இரும்புக் 'கேட்' வரை
பணம் பண்ணுவதிலேயே
தான்தோன்றியாகிப் போன நிதானமில்லாதவனும்...
எழுத்து வா!
 தோழனே!
சிதைந்து கொண்டிருப்பது
உனது நிர்மானம் தான்.
தவ்ஹீதைப் பணயம் வைத்து
பணம் சம்பாதிக்க
நீ ஏன் தயாரானாய்?
உன்னைப் புரிந்து கொள்ள முடியாத
அப்பாவி அறிவிலிகள் சில
அற்ப ஈச்சங் கொட்டைக்காய்
ஈமானையே அடகு வைத்துவிட்டனர்;.
அல்லாஹ்வின் தீனைப் பேசுவோரைக் குறி வைக்கின்றனர்.
தவ்ஹீதிக்கு வெளியே நின்று கொண்டு
பத்திரிகை
விமர்சனம்
வழிகேடு
சிகரட்
பீடி
பிரதேசியவாதம்
எத்ததனை கண்ணாடி
இந்தப் போலிகளுக்கு...
தவ்ஹீத் முகவரியுடன்
நீ
 போலிகளைக் கழைந்து விட்டு
 எழுந்தோடிவா!
ஸலபிய்யாத்
கலபிய்யத்
குராபத்
ஈச்சங்கொட்டை
எலும்புத் துண்டு
குழி வெட்டல்
பழி தீர்த்தல்
பிரிவினை ஒப்பாரி
போலி ஒற்றுமை
போன்றவைகளற்ற
சகோதரத்துவம் நிறைந்த
ஒரு தூய தவ்ஹீத்
வீட்டை தனித்து நின்று
கட்டிக் காப்போம்
இறுதி மூச்சு வரை

Share this article :

+ comments + 1 comments

Anonymous
December 10, 2011 at 5:14 PM

Super Kavitai

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger