எதுன்கஹகொடுவ பள்ளி விவகாரம் என்ன?

குருநாகல் தல்கஸ்பிடிய பகுதியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பித்தவுடன் எனக்கு எதிராகவும் கிளைக்கு எதிராகவும் பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதில் JASM உடைய தல்கஸ்பிடிய கிளையும் IIRO வைஸ் என்கிற உவைசும் அவரது அடியாட்களும் முன்னணிவகித்தனர்.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதக் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எமது கிளைக்கு எதிராக மாவதகம பொலிசில் என்ட்ரி போட்டனர்.பன்சலவில் உள்ள ஹாமந்துாரிடம் சென்று தொழுகையைத் தடுக்க கடிதம் வாங்கி கோட்டில் கொடுத்தனர். தல்கஸ்பிடியவில் SLTJ சகோதரர்களை ஊர் நீக்கம் செய்துள்ளனர். இரண்டு அப்பாவி சகோதரர்களுக்கு அடித்துவிட்டு அடித்த மாவீரர்களில் ஒருவன், SLTJ சகோரர்கள் 6 பேர் அவனுக்கு அடித்தாக பொலிசில் என்ட்ரி போட்டுவிட்டு, மாவதகம வைத்தியசாலையில் படுத்துக் கொண்டடான்.
இஸ்லாமிய நிலையத்தை பள்ளி என்று பன்சலையில் காட்டிக் கொடுத்து AGA  விடமும் தொழுவதைத்   தடுக்கச் சொல்லி கடிதம் எடுத்தனர். Police  ஐக் கூட்டி வந்து மார்க்க நிகழ்ச்சிகளைத் தடுக்கின்றனர்.கருத்தை கருத்தால் வெல்லமுடியாத  அன்ஸார் சுன்னாவாதிகள் இவ்வாறு குராபிகள் செய்யாத அராஜகங்களை எல்லாம் செய்கின்றனர். குராபிகள் இவர்களிடம் பாடம்  கற்றுக் கொள்ளும் அளவு இவர்களது அயோக்கியத்தனம் உள்ளது.
எங்கள் கொள்கையை விவாதித்து தவறு என்று நிரூபிக்க வக்கு இல்லாததால் இந்தக் கொள்ளைக் கும்பல் மிரட்டி அவதுாறுகளைப் பரப்பி என்னை டெமேஜ் பண்ணினால் இங்கு உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைக்கு பாதகம் ஏற்படும் அதனால் தங்கள் மோசடிகளை மறைக்கலாம் என்று ஒரு சதித்திட்டம் தீட்டினர்.

பல இலட்சம் பெறுமதியான  பள்ளிக் காணியை தனது வாரிசு சொத்தாக்கிய (இந்த மோசடி பற்றி அடுத்தடுத்து வரும்) IIRO உவைஸ் மல்லவியின்  சதி ஆலோசனையில்  5 மாதங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளிக் கிழமை ஜூம்ஆ நேரத்தில் முன்னால் நிர்வாகி ஒருவனின் வீட்டுக்கு இருவர் அழைக்கப்பட்டு என்னைப்பற்றி அவதுாறு பரப்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கிளைக்கு ஜூம்ஆ நேரத்தில் வந்த அந்த இருவர் எதுன்கஹகொடுவ பள்ளி விவகாரம் பற்றி பேசவேண்டும் அதற்குப் பண உதவி செய்தவர் உங்களிளுக்கு மீதிப் பணம் அனுப்பியுள்ளார். உங்கள் தம்பி எங்களிடம் இரண்டு டியுப்வெல்வுக்குப் பணம் வாங்கினார். அதுபற்றியும் பேச வேண்டும் என்றும் கூறினர்.
எனக்கு மறுநாள் ஒரு முக்கிய பரீட்சை இருந்தும் நான் இவர்களுடன் பேச சம்மதித்தேன். ஏனெனில் நான் ஓடி மறைந்துவிட்டதாக ஊரில் அன்று நிறுவன கொள்ளை வியாதிகளால் செய்தி பர்பப்பட்டது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.  அதனால் நான் தைரியமாக இக்கயவர்களை எதிர்கொண்டேன்.
அன்று ஜூம்ஆவுக்கு சற்று முன்னர் நான் ஓடி மறைந்துவிட்டதாக ஊரில் செய்தி பரவுவதாகவும் உவைஸ் மவ்லவி வீட்டில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் துபை கிளையிலிருந்து நீக்கப்ட்ட ஹூஸைன் உட்பட பலர் கூடி இருக்கும் செய்தியும் எனது வீட்டுப் பக்கம் ஒரு திரீவீலுக்கு ரபீக்குர் ரஹ்மான் என்பவரால் வழிகாட்டப்படும் செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது.
தன்னுடைய பெயரைக் கூட இதுதான் என்று சொல்லத் தகுதியற்ற கோழை ஒருவன் தவறான அர்த்தம் வரும் வகையில் எடிட் செய்து சில காணொளிகளை இணையங்களில் பரப்பி வருகின்றான்.முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் இவன் பொய்யன்.எப்பவவும் இந்த ஏமாற்றுக் கும்பல் தங்களை நல்லவர்களாகக் காண்பிக்க பெரிய தாடியை வைத்துக் கொள்ளும்.அந்த அப்துல் வதுாத் கும்பல் வகையில் தனது பெயரை  இஸ்மாயில் என்று பொய் சொன்ன அவன் யார்?
அவன் தான் இவன்.

அஸவர் புரோக்கர்.                      
(யாருக்கு புரோக்கர் என்று கேட்க வேண்டாம்.பின்னர் அந்த சமாச்சாரங்கள் எல்லாம் வரும்.) இவன்தான் தொழுகின்ற காட்சியை படம் பிடித்து ஜேஏஎஸ்எம் வாதிகளுக்கு கோட்டில் கொடுக்க உதவியிருந்தான்.அதாவது தொழுகையைத் தடுக்கும் அபுஜஹ்ல் வேலையை செய்யத் துணை செய்துள்ளான்.
நான் இவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தேன். அண்மையில் உவைஸ் மவ்லவி கட்டிய பள்ளிகள் பல தவ்ஹீத் ஜமாஅத் வசமாகிவிட்டன. பண்டாரவலைப் பள்ளியில் இவரை விரட்டிய கோபத்தில் சம்பந்தமில்லாத இடத்தில் எனது மாமிசத்தை இவர் சாப்பிட்டுவிட்டு வந்ததால் அங்கு  பலரும் என்னிடம் இக்கும்பல்களின் அயோக்கியத்தனத்தைத் தோலுரித்து பதில் அளிக்க வேண்டினர்.அதனால் இதனுடன் சம்பந்தப்பட்ட என்னைப் பழிவாங் சம்பந்தப்படுத்திக் கொண்ட நாடகமாடும் நயவஞ்சகக் கும்பல் அனைவா் பற்றியும் அடுத்தடுத்து மறுப்பு வெளியிடப்படும்.
பள்ளி விவாகரம் - நடந்தது என்ன ?
சென்ற ரமழானில் 2012 நான் விடுமுறையின் நடுவில் சவுதி செல்லும் போது எனது சகோதரரும் சகோ. ரினாசும் என்னோடு உம்ராவுக்கு வந்தனர்.
எதுன்கஹகொடுவ தப்லீக் பள்ளியை அபகரித்து உவைஸ் மவ்லவி ஆதரவாளர் ரமீஸ் ஸலபி குழு பல வருடங்களாக வழக்குப் பேசி வருகின்றனர். இந்தப் பள்ளி சமரசக் கொள்கையுடன் உள்ளது. இப்பள்ளி தப்லீக் ஜமாஅத்திற்கு வழக்கில் தீா்வாக வாய்ப்பு உள்ளது. (நாடு முழுக்க 350க்கும் அதிகமான தப்லீக் பள்ளி கட்டிக் கொழுத்த இவர் இந்த பள்ளிக்காக ஏன் வழக்கிற்கு உதவுகிறார்? ரமீஸை கையாளாகப் பயன்படுத்தகிறார் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது)
அதனால் அங்கு ஒரு துாய தவ்ஹீத் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை சகோ. ரினாஸ் என்னிடம் முன்வைத்து யாராவது தனிப்பட்ட முறையில் .உதவுவார்களா என்று கேட்டார். நான் முயற்சிப்போம் என்று கூறிவிட்டு உம்ரா முடித்துவிட்டு ரியாத் வந்து இலங்கையைச் சேர்ந்த ஒரு மவ்லவியை சந்தித்து இவா்களது ஆவணங்களை கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
ஆவணங்களைப் பார்த்த அவா் இதற்கு அவர் உதவ முன் வந்து ஒரு அரேபிய தனவந்தர் மூலம் முதல் கட்டமாக 10 இலட்சத்து 20 ஆயிரம் இலங்கை ரூபாய் தனிப்பட்ட முறையில் எந்த நிறுவனத்துடனும் தொடர்புபடுத்தாமல் எனக்கு அனுப்பினார். அதை நான் தனிப்பட்ட முறையில் வழங்காமல் முக்கியமாக தஃவாவுடையவும்  எனதும் பாதுகாப்பு கருதி (நாளை யாராவது கயவா்கள் நான் பணக் கையாடல் செய்ததாக சொல்லக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன்) ஜமாஅத் தலைமையிடம் ஒப்படைத்தேன்.இதற்குரிய  ஆதாரம் என்னிடம் உள்ளது.
ஜமாஅத் அப்பணத்தை சகோதரர் ரினாஸ் அவரின் தலைமையின் கீழ் செயற்படும் கிளைக்கு வழங்கியது.அவா்கள் இத்தொகையை வைத்து பள்ளி கட்டுமான வேலையை ஆரம்பித்தார்கள். 2012 டிசம்பர் - ஜனவரியில்  மழை கடுமையாக இருந்ததால் வேலை சற்று தாமதமானது.
அதன் பின்னர் அந்த இலங்கை மவ்லவியும் இன்று அவதூறு பரப்பும் இரண்டு மோசடிப் பேர்வழியும் 4-2-2013 ல் வந்து அங்கு இடத்தைப் பார்த்தனர். அப்போது எனக்கு அழைப்பு விடுத்தனர் நானும் சென்றிருந்தேன்.அந்த போட்டோக்களைத்தான் இப்போது சலன அசைவியக்கத்தில் விகாரமாக்கிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 அவர் பார்க்க வந்த போதும் எந்த நிபந்தனையும் என்னிடம் விதிக்க வில்லை. எனது வீட்டிலிருந்து எதுன்கஹகொடுவ கிட்டத்தட் 70 கிமீ துாரம் என்பதால் என்னிடம் பணம் தரவேண்டாம்.இப்போது நீங்கள் நேரில் வந்து பார்த்துவிட்டீர்கள் அதனால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நான் ஒதுங்கிக் கொண்டேன். அதன் பின்னர் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
10 இலட்சத்து 20 ஆயிரம் வழங்கிய பணத்திற்கு வேலை நடந்ததை நேரில் பார்த்த திருப்தியில் மீண்டும் சகோ. ரினாஸ்வுடைய கணக்கிற்கு 5 இலட்சம் வழங்கப்பட்டது. பின்னர் இன்னும் ஒரு தொகை அனுப்பினர். பள்ளிக்கு வந்த பணத்தில்  நாங்கள் office  எடுக்க செலவிட்டுவிட்டோம். பின்னர் நாளை பணம் தாரன் என்று பல தடவைகள் ஏமாற்றியுள்ளார், பரிசுத்தவான் அஜ்மல்.
 இவ்வளவு பணம் சவுதியிலிருந்து உண்டியலில் வந்திருக்கிறது என்று அஜமல் என்னிடம் சொல்கிறான் ஆனால் அந்தத் தொகை எனக்கு வரவில்லை என்று பல தடவை ரினாஸ் கூறினார். இவ்வாறு இவர்களின் ஏமாற்றுக்கள் பல தடவை நடைபெற்றது. அந்த டெலிபோன் உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக உள்ளன.
பின்னர் இன்னும் ஒரு தொகை அனுப்பினர். 360000 ஆயிரம் ரினாஸ்வுடைய கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது. (ரியால் கணக்கில் இதைவிட அதிகம் வரவேண்டும். அதில் பல ஆயிரங்கள் இடைத் தரகர் அஜ்மலால் சுருட்டப்பட்டுவிட்டது. எனது தம்பிக்கு வழங்கியதிலும் திருவிளையாடல் செய்துள்ளார் இந்த பரிசுத்தவான்!. அது பின்னர் வரும்.)
தொடர்ந்து பள்ளி கட்டுமான வேலை நடைபெற்றபோது அங்குள்ள உவைஸ் மவ்லவி கும்பல் தவ்ஹீத் வேடம் போடும் ஜமாஅதே இஸ்லாமிக்காரன் அஜ்மல் மூலம் துாண்டிவிட்டு  பிரச்சினையை ஆரம்பிக்கின்றனர். அவர்களும் ஏஜியவிடம் கூட போட்டுக் கொடுத்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் பள்ளி கட்டுவதாகவும் அதைத் தடுக்கும் படியும் அங்குள்ள  உவைஸ் மவ்லவியின் நயவஞ்சகக் குரூப் பொலீஸில் போட்டுக் கொடுத்தது. அது எடுபடாமல் போனது. பின்னர் இந்த உண்டியல் இடைத் தரகர்களிடம் போட்டுக் கொடுத்தனர். அதன் பின்னர் குரங்கின் கையில் பூமாலை கிடைத்த மாதிரி பிரச்சினை தொடர ஆரம்பிக்கிறது.
  சவுதியில் இருக்கும் மவ்லவியிடம் தன்னைக் கொள்கைவாதியாகக் காட்டி காசு கறக்கும் ஜமாஅதே இஸ்லாமி அஜ்மல்  கொள்கையற்ற நிபந்தனையிட்டுள்ளார். பெயர்ப்பலகை வைக்க வேண்டியுள்ளார். இதேபோல் பல நிபந்தனைகள் போட்டுள்ளார்.  அதனை அந்த சகோதரர்கள் மறுதலித்தனர். அதுதான் இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வேறு எந்தக் காரணமும் இவர்களுக்கு சொல்ல முடியாததால் என்மீதும் இவர்களின் கோபம் வலுத்தது.
இவர்களின் கல்லை வைத்திருந்தால் அவர்கள் நல்லவர்கள்.  மறுத்ததால் அவர்கள் ஏமாற்றியவர்கள். 
ஸ்டோரை பள்ளி என்று ஏமாற்றியவர்கள் என்று இப்போது அவதுாறுபரப்புகின்றனர்.இவாகள் வெளியிட்ட திருட்டு வீடியோவில் அது பள்ளி என்பதற்கான ஆதாரத்தை அவர்களே வெளியிட்டும் உள்ளனர்.
 புத்தளம் அர்ஹம் மவ்லவிக்கு இதே குற்றச்சாட்டை சில வருடங்களுக்கு முன்னர் பள்ளி கட்டிய விடயத்தில் உவைஸ் மவ்லவி கூறிக் கொண்டிருந்தார்.இவ்வாறுதான் நிறுவனங்களின் மறுபக்கம் உள்ளது.ஜால்ரா அடித்தால் நல்லவன் இல்லாவிடால் கெட்டவன். இவாகளின் யோக்கியத்தனத்தைப் பார்த்துவிட்டுத்தானே நாம் நிறுவனங்களைவிட்டுத் துாரமாகினோம்.
இதில் சம்பந்தப்பட்ட அஜ்மல் - அஸ்வர் புரோக்கர் எவ்வளவு பெரிய கேடிகள் என்று பாருங்கள். அந்த இடத்திற்கு வந்து பார்த்துவிட்டுத் தான் சென்றார்கள். ஆனால் பார்த்த பின்னர் (இவனது வாதப்படி) ஸ்டோர் கட்ட நீ ஏன் 860000 ஆயிரம் மீண்டும் பணம் வழங்கினாய்?. சுய புத்தியோடுதான் வழங்கினாய? அல்லது உனக்கும் உன்னோடு சேர்ந்து சிந்து விளையாடுவோருக்கும் மறை கலண்டுவிட்டதா?


வந்து பார்க்காவிட்டால் கூட போலிக் காரணம் கூறலாம்.
முதலில் பள்ளிக் காணியை செக் பண்ணினாயா? இதுதான் உனது நி(ர்வாண)(றுவ)னத்தின் இலட்சணமா? கூறுகெட்டதனமாக வெளிநாட்டுப் பணத்தை எப்படியும் இவர்கள் செலவு செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு பெரிய ஆதாரமாக உள்ளது.
இதில் தொடர்புபட்ட எதுன்கஹகொடுவ சகோதரர்கள் வழங்கப்பட்ட பணத்திற்குரிய வேலையை செய்துள்ளனர். அதனால்தான் இவர்களும் இடத்தைப் பார்த்த பின்னர் பணத்தைக் கொடுத்துள்ளனர். நிபந்தனை முரண்பாட்டில் தான் இவர்கள் கூடாதவர்களாகியுள்ளனர்.  இவர்களுக்கு ஜால்ரா அடித்தால் அவர்கள் நல்லவா்கள் இல்லாவிட்டால் மோசடிக்காரர்கள் என்ற யூத வழிமுறையைத்தானே இவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
முஸ்லிம் மெசஞ்ரின் மோசடி
இதில் பாருங்கள் (இடம் இருந்து  1020000 வும்) என்று கடிதம் ஆரம்பிக்கிறது.யாரிடம்? இதன் தலை எங்கே? ஏன் மேற்பகுதிய அ.புரோக்கர் சாப்பிட்டான்? .இது ஒன்றே இவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பது தெரியவில்லையா? இந்த கடிதத்தில் எங்காவது நிறுவனத்திடம் செய்த உடன்படிக்கை இருக்கிறதா? யார்? யாருக்கு எழுதின விபரமாவது இருக்கிறதா? மொட்டத் தலையன் குட்டையில் விழுந்தமாதிரி ஒரு வெள்ளைப் பேப்ரில் உள்ளதை போட்டு சீன் காட்டிக் கொண்டிருக்கின்றா்ன இந்த வேலையற்ற ஆ(பா)சாமிகள். நான் ஜித்தாவில் கடல் நடுவில் கப்பலில் உரையாற்றும் போட்டோவை எங்கோ உள்ள ஒன்றுடன் இணைத்து மொட்டத் தலையன் குட்டையில் விழுந்துள்ளான் என்ற நிலையில் பரப்பி வருகின்றனர். அதமாதிரி நான் போடமாட்டேன். இவன் பொ.பொறுக்கின்டா அதற்கான தகுந்த ஆதாரத்துடன்தான் போடுவேன்.
ந்த அஜ்மல் என்பவா் உவைஸ் மவ்லவி - காமில் ஸலபி –இஸ்மாயில் - இம்தியாஸ் ஸலபி - கலீல் ரஹ்மான் போன்ற பலர் பற்றி சொன்ன அனைத்தும் என்னிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைப் பற்றி மோசமாகச் சொன்னவனை நடு வீட்டில் வைத்து உவைஸ் மவ்லவி அலாவுகிறார் என்றால் இது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அயோக்கித்தனத்தைவிட வேறு என்ன இருக்க முடியும்?.
பள்ளிக் காணியை தனது வாரிசு சொத்து என்று சொல்லிய குராபி பள்ளி கட்டுவதையும் என் மீது அவதூறு சொல்வதையும் முழு நேரத் தொழிலாக செய்துவரும் உவைஸ் மவ்லவியின் பள்ளிக் காணி மற்றும் ஊழல், ஹூஸைன் நீக்கப்பட்டது தொடர்பாக  மெசஞ்சரில் வெளியான உவைஸ் மவ்லவியின் வீட்டில் வைத்து ஹூஸைன் சொன்னவை எவ்வளவு பொய்கள் நிறைந்த அபத்தமானது. அதை அதிர்ச்சியாக காண்பிப்பதன் அபத்தம் என்ன?. எங்கள் கிளையில் வைத்து JASM நிர்வாகிகள் பற்றியும் உவைஸ் பற்றியும் இஸ்மாயில் முபாரக் பற்றியும் ஹூஸைன் என்ன சொன்னார்?
 அத்தோடு, எனது தம்பி வாங்கியதாக கூறிவிட்டு என்னுடன் தொடர்புபடுத்தப்படும் விடயங்கள் என்ன? அதில் உள்ள அபத்தம் என்ன அஜ்மல் JASM வாதிகளைப் பற்றி என்ன சொன்னான்.அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க எனக்குச் சொன்னான் என்ற ஓடியோ வீடியோ பதிவுகள் அத்தனையும் அடுத்தடுத்து வெளிவரும்.


JASM திருட்டு CD வினியோகிகளின் விசித்திர மந்தம்
முகநுாலில் காணப்பட்ட திருட்டு CD தொடர்பாக ஓர் அவதானியின் அலசலை இங்கு தருகின்றோம்.
எதுன்கஹகொடுவ பள்ளி தொடர்பாக நடந்த உரையாடலை பல அவததுாறுகளை சோடித்து தேவையான எடிட் செய்து நளலிங்வுடன் முடிச்சுப் போட்டு JASM பள்ளியால் வெளியிடப்பட்டு வினியோகிக்கப்ட்ட ஹபீல் ஸலபி தொடர்பான வீடியோ பற்றி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்த வீடியோவை நான் முழுதும் அவதானித்தேன். அஜ்மல் வகையறாக்களின் திருவிளையாடல்களை கண்டு சிரிப்புத்தான் வந்தது. ஒரு வகையில் வெகுளித் தனத்தைக் கண்டு பரிதாபமும் ஏற்பட்டது.
தேவையான இடத்தில் எடிட் செய்து தமக்கு சாதகமானதை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பல மாதங்கள் எடிட் செய்து வெளியிட்டதில் அவர்களுக்கே பாதகம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. அதனால்தான் அவர்களின் மடமையைத் தோலுரித்துக் காட்டும் பகுதியையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.அதில் அவர்களின் கயமைத்தனமும் கபடத்தனமும் அம்பலமாகிவிட்டது.அவற்றை நான் இங்கு புட்டுப் புட்டு வைக்கப் போகின்றேன். நிதானமாக எனது அவதானங்களை வாசித்து உண்மையை உணருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தையும் ஹபீழ் ஸலபியையும் அவமானப்படுத்தவே இவர்கள் கடுமையான முயற்சி எடுத்த அசைவுகளும் ஆதாரங்களும் அதில் உள்ளதால் இது பற்றி ஒரு புலன் விசாரணை நடத்தினேன்.

இந்த சதியில் உவைஸ் மவ்லவி - குஸைன் மவ்லவி - தல்கஸ்பிடிய அன்ஸார் சுன்னத்தில் முஹம்தியா என பல கள்ளக் கூட்டு சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த அஜ்மல் கோள் மூட்டி சண்டை மூட்டுவதில் பெண்களை விஞ்சியவன். அத்தோடு சித்தீக் மதனியின் உறவினர் என்பதால் இந்த விடயம் குரங்கின் கையில் கிடைத்த பூமாலைபோன்று ஆகிவிட்டது. கெம்பஸ் போகாத ஒருவர் கள்ள செடிபிகேட்டு அடித்து. அதன் மூலம் இன்று வரை பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரும் இதைப் பரப்பிவருகின்றார். இவரின் கேம்ஐ மறந்து இவர் இரட்டைக்கேம் ஆடுகிறதைப் பார்த்து சிரிப்பு அல்ல பரிதாபம்தான்; வருகிறது. அவதுhறு பரப்பி அடுத்தவனை மானபங்கப்படுத்தி நரகம் போக JASM வாதிகள் நல்லாப் பாடு படுகிறார்கள்.
இனி விடயத்திற்கு வருவோம்.
எதுன்கஹகொடுவவில் சூனியக்காரன் அஜ்மல் பேசும் போது ஹபீல் ஸலபி இரண்டு நளலிங் தல்கஸ்பிடியவில் செய்து எங்களுக்கு ரிபோட் அனுப்பியுள்ளதாக சொல்லும் தகவலுடன் அந்த தகவலை ஒருவர் அந்த இடத்திலேயே மறுப்பதுடன் அந்த எடிட் செய்யப்பட்ட வீடியோ ஆரம்பமாகிறது.
அடுத்து ஹபீழ் ஸலபியின் தல்கஸ்பிடிய ஜீம்ஆவின் ஒரு குர்ஆனிய வசனம் உள்ளது.அதாவது ஒரு கெட்டவன் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் அதை தீர விசாரிக்க வேண்டும்.இதைப் பரப்பும் எவனும் இது பற்றி சம்பந்தப்பட்வரிடம் விசாரிக்கவில்லை.ஆனால் கொஞ்சம் மூளையை செலவு செய்திருந்தால் அதிலுள்ள எடிட் முரண்பாடுகளை அறிந்திருக்கலாம். அந்த மன நிலைதானே இன்று பலரிடம் இல்லாமல் போய்விட்டது.கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவன்தான் மிகப் பெரிய பொய்யன். சிடி மாமாக்கள் இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்தார்னகளா? இல்லை.
அடுத்து அவரின் தம்பியிடம் கோல் பன்னி நீங்க கொஞ்சம் பணம் வாங்கினீங்க அது எங்க நளளிங் செய்யப்பட்டுள்ளது? என்று அஜ்மல் கேட்கும் காட்சி உள்ளது.
இதில் முரண்பாடு உள்ளது. ஹபீல் மவ்லவி ரிபோட் அனுப்பினால் அந்த ரிபோட்டில் இடம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அது இங்கு இல்லை. ஒரு வாரத்திற்கு முன்னர் ஹபீழ் ஸலபி பணம் எத்தார் என்று எதுன்கஹகொடுவவில் சொன்னவன் பின்னர் அவர் தம்பி எடுத்தார் என்று அவரிடம் விசாரிக்கின்றான்.
எங்கே புரஜக்ட் செய்வது என்று தெரியாமல் அஜ்மல் பணம் கொடுத்தானா? இவன் என்ன ஒரு கேனக் கிருக்கனா? ரிபோட் இருக்கு என்கிறான் பின்னர் அந்த இடம் எங்கே என்று பணம் வாங்கியவரிடம் கேடகின்றான். பின்னர் இன்னொருவரிடம் கேட்கின்றான். இது ஒரு ஜோடனை என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது. இது நடந்து பல ஆண்டுகள் கழிந்தமாதிரி தான் அந்த சலனப்படம் உள்ளது. இப்போது அதனைத் தோன்டுவதன் மர்மமமென்ன?
இத்தோடு இதை செய்தவர் JASM இயக்கத்தில் இருக்கும் போதுதான் பல வருடங்களுக்குப் முன்னர் செய்துள்ளார். அவர் அதிலிருந்து நீங்கிய பின்னர் இதை வெளிப்படுத்துகின்றனர் என்றால் இதில் ஏதோ சதி இருக்கிறது என்பது அம்பலமாகிறது? இது அறிவுள்ளவர்களுக்குப் புரியும் அறிவற்றிவர்களுக்கு எப்படித்தான் புரியப் போகிறதோ???????
ஏன் திருட்டுத்தனமாக வீடியோ எடுக்க வேண்டும்? ஹபீல் மவ்லவி குறிப்பிட்ட நிறுவனத்திடம் சைன் பன்னி பணம் வாங்கியதற்கான ஆதாரத்தைக் காட்டிவிட்டால் விடயம் முடிந்துவிடும். அதைவிட்டுவிட்டு காடுமோடு ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்ட பொய்கள் தேவைப்படாது என நினைக்கின்றேன். 
  இது வரை ஹபீழ் அந்த நிறுவனத்திற்குப் போனதில்லை. 2011ல் செய்யப்பட்டதை 2013ல் தேடுகின்றனர் என்றால் அதற்கு உள்நோக்கம் இருக்கு என்பது தெளிவாகிறது. எதுன்கஹகொடுவவில் வைத்து. அஜ்மலை 2013 பெப்ரவரியில்தான் முதலில் ஹபீழ் ஸலபி சந்தித்துள்ளார். 2011ல் எப்படி அவரை சந்திக்காமல் அஜ்மல் பணம் கொடுத்தான்? மெஜிக் மூலமாக அல்லது சூனியத்தின் மூலமாகக் கொடுத்தானோ?
எந்த நிறுவனமும் புரஜக்ட் எங்க செய்வது அதற்கு எவ்வளவு செலவாகும் அனைத்தையும் விசாரித்தே பணம் வழங்கும். இந்த அஜ்மல் தன்னை ஒரு கிறுக்கன் என்று அம்பலப்படுத்திக்கொள்கின்றான். இதற்கு முன்னர் 1-2-3 என்று இந்த புரஜக்ட் செய்துள்ளான்.இவன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் 4-5 இலக்கங்கள் உள்ளன.இதற்கு முன்னர் 3 செய்த அனுபவம் உள்ளது.அவ்வாறாயின் 4க்கும் 5வதுக்கும் எவ்வளவு செலவாகும் தொகை இவனுக்குத் தெரியாமல் போனது? இதில் ஏதோ அவமானப்படுத்தி அவதுhறு பரப்பும் சதித்திட்டம் உள்ளது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
அடுத்து கையில் கட்டுப் போட்ட ஒருவர் கூட இதை அவர்ட மச்சான் செய்து தந்ததாகத்தான் சொல்கிறார்.அவரும் ஹபீழ் மவ்லவி சம்பந்தப்பட்டதாகச் சொல்லவில்லை.
அத்தோடு இது தனிப்பட்ட முறையில்தான் அந்த மல்லவி கொடுத்துள்ளார் என்பதற்கு அஜ்மலே சாட்சி.இதோ அவன் சொல்வதைக் கேளுங்கள்.
அடுத்து அது தனிப்பட்ட முறையில்தான் பெறப்பட்டது.பின்னர் தான் நிபந்தனை போடப்பட்டுள்ளது.அதனால் அவர் மீதிப் பணத்தை வாங்காது விட்டுள்ளார்.

ஹபீல் மவ்லவி ஒரு ஆட்டிஸ்ட். அவர் பெனர் - பதிவுப் பலகை பதாகை என்பன செய்வார்.இதற்கு முன்னர் பல நிறுவனங்களுக்கு செய்துள்ளார்.அது அவரின் தொழிலும் கூட. இவர் கல்லுப் பதிகக் உமர் பாரூக்கிடம் செல்லவும் இல்லை.
5
மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நிறுவனம் இந்த வேலை நல்ல முறையில் முடிவடைந்துள்ளது என்று அவர்களது முகநுhல் பக்கத்தில் போட்டுள்ளது. ஆனால் தற்போது பொறம் போக்கு முகநுhல் ஒன்றின் பக்கத்தில் இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோ போடப்பட்டதன் நோக்கம் என்ன? இது பற்றி விவாதிப்பார்களா?
20
இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பள்ளிக் காணியை தனது பெயரில் எழுதி பட்டப் பகலில் கொள்ளையடித்த உவைசுடன்  அவனது வீட்டில் இருந்துகொண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிததுவிட்டு அநாமதேய வீடியோவை பரப்பும் இந்த நயவஞ்சகர்களின் நாணயத்தை - நியாயத்தை நியாய உள்ளம் உள்ளவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
தவ்ஹீத் என்று பொய் சொல்லி குராபிகளுக்கு 300க்கும் அதிகமான பள்ளி கட்டி சம்பாதிக்கும் இந்த நிறுவனப் பேர்வழிகள் இப்படியெல்லாம் செய்வது நயவஞ்சகத்தனமாக உள்ளது. எத்தனை பள்ளிகள் செலப் ஒழுகுகிறது என்று லிஸ்ட் எடுத்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.அதே போல் சில தவ்ஹீத் ? நிறுவனங்கள் கிணறு கட்டி தற்போது காடு மூடியுள்ளன. ஏன் பவுஸரில் தண்ணி நிரப்பி அரபியை ஏமாற்றி தண்ணி காட்டியதை எல்லாம் மறந்துவிட்டார்கள் போல????
20
இலட்சம் பெறுமதியான பள்ளிக் காணியை உவைஸ் மவ்லவி திருடி தனது பெயரில் எழுதி வைத்துக் கொண்டு தனது வாசிசுச் சொத்து என்கிறார்.அந்த மோசடியை அம்பலப்படுத்தி அதை வாங்கி எடுக்க வக்கில்லாத கரண்ட் மீடரில் மோசடி செய்து மாட்டிய மோசடிப்பேர்வழிகள் நியாயம் பேச முனைகிறார்கள்.
அன்று   JASM ல் இருக்கும் போது உடன்படிக்கையோடு செய்த வேலை பற்றி இன்று சீடி வெளியிடுவது வெட்கமாக உள்ளது. இது இவர்களின் நிறுவனத்திற்குக் கேவலமானது என்பதை இவர்கள் உணர்வார்களா?

சில மாற்றங்களுடன் நன்றி முகநுால் https://www.facebook.com/photo.php?v=442668712519049
 
Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger