தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த உஸ்தாத் மன்சூர்



இந்த ஆக்கம் அழைப்பு மலர் -2 மணம் -1 ல் 2007ல் எழுதப்பட்டது. தற்போது முக்கிய சில திருத்தங்களுடன் இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. 
20-03-2005 அன்று அக்குருணையில் மர்ஹபா வரவேற்பு மண்டபத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிஞர் PJ அவர்கள் இஸ்லாத்தில் இன்றைய முஸ்லிம்களின் நிலைஎன்ற தொனிப்பொருளில் அழகான, ஆழமான ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.

 இன்றைய முஸ்லிம்களின் இஸ்லாம் பற்றிய அறியாமையை தோலுரித்துக் காட்டி, இஸ்லாத்தை வியாபாரமாக்கி, புரோகிதம் புரிந்து, வயிறு வளர்க்கும் இன்றைய மார்க்கம் கற்றோரின் தகிடுதத்தங்களையும், மத்ஹபு மாயைக்குள் மாண்டு போய், நான்கு கூறாகி, நாசத்தின் விளிம்பில் நின்றுகொண்டு, மீள முடியாது தவிக்கும் மக்களின் பரிதாப நிலையையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி, மிகவும் அழகானதோர் உரையாற்றினார்கள்.
 வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும்; நபி அவர்களின் கருத்துக்களை கூட வஹிஇல்லாத, சுய கருத்தாக இருந்தபோது, பெண்கள் கூட எதிர்க் கேள்வி கேட்டுப் பின்பற்றாது விட்டுள்ளனர் என்பதற்கு பின்வரும் ஆதாரத்தையும் முன்வைத்தார்கள்.
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள  கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (5283)
மார்க்கத்தின் அடிப்படைய ஆதாரங்கள் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளக்கும் ஹதீஸ் இது! மார்க்க விஷயத்தில் படைத்தவன் மட்டுமே கட்டளையிட முடியும் வேறு எவரும் கட்டளையிட முடியாது. அப்படி கட்டளையிட்டால் அதை ஏற்கத் தேவையில்லை என்பதையும் இச்சம்பவம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பரீரா (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார்கள். அப்போது அவர்கள் முஃகீஸ் என்ற நபித்தோழரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்களும் அடிமையாகவே இருந்தார்கள். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அவர்கள் சுதந்திரமானவர்களானார்கள். இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம், விரும்பினால் அவரை விட்டுவிடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள் முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை. ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்கள். அவர்களுடன் வாழ விரும்பினார்கள். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். எனினும் பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார்கள். ஆனாலும் பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
மஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) அவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி) அவர்கள், இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது என் சொந்த விருப்பம்தான், நான் பரிந்துரைதான் செய்கிறோன். இது மார்க்க சட்டம் அல்ல! என்று தெளிவுபடுத்திய போது முஃகீஸ் எனக்குத் தேவையில்லை என்று கறாறாக கூறிவிட்டார்கள். இதைத்தான் மேற்கூறிய ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
மார்க்கத்தில் கட்டளையிட அதிகாரம் உள்ளவன் நம்மை படைத்த இறைவன் மட்டுமே! அவனுக்கே முழு அதிகாரமும் உள்ளது என்ற கருத்தையே இந்த சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6 : 57)
படைத்தவனின் கட்டளைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவற்றை பார்த்தே நாம் எந்த முடிவையும் மார்க்க விஷயத்தில் எடுக்க வேண்டும். அவன் இறக்கிய வேத வசனங்களை விட்டுவிட்டு மனிதக் கூற்றுகளையும் யூகங்களையும் உலக நடைமுறைகளையும் பின்பற்றினால் நாமே நஷ்டவளிகளே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5 : 44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 5 : 45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படை யில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (அல்குர்ஆன் 5 : 47)
படைத்தவன் இறக்கியது என்று கூறும் போது திருக்குர்ஆன் மட்டுமல்ல! அத்துடன் அதை விளக்குவதற்கு நபி (ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். அவர்கள் கூறிய சட்டத்தையும் நாம் ஏற்றவேண்டும்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16 : 44)
இந்த வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களின் விளகத்தையும் நாம் ஏற்க வேண்டும். மேலும் திருக்குர்ஆன் அல்லாத வஹீயையும் (சுன்னாவையும்) அல்லாஹ் இறக்கியுள்ளான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3 : 164)
இவ்வசனத்தில் இறைத்தூதர் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஞானம் என்று கூறப்பட்டுள்ளது நாம் ஹதீஸ் என்று கூறுவதைத்தான். எனவே திருக்குர்ஆனோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் பின்பற்றுவது கட்டாயமாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்று நடப்பது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பதைப்போலவாகும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
இவைபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் இரண்டே இரண்டுதான்! இந்த இரண்டு மட்டுமே பின்பற்றப்படுவதற்கு தகுதியானதாகும். எவ்வளவு பெரிய மனிதரின் கூற்றாக இருந்தாலும் அந்த கூற்றை ஏற்று நடப்பது யாருக்கு கட்டாயம் இல்லை.
இதற்கு சிறந்த உதாரணம்தான் பரீரா (ரலி) அவர்களின் சம்பவம். முஃகீஸ் (ரலி) அவர்களுடன் சேர்ந்து வாழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய யோசனையை பரீரா (ரலி) அவர்கள் இது மார்க்கச் சட்டமா? அல்லது உங்கள் சொந்தக் கருத்தா? என்று வினவி நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறப்பட்ட போது நபிகளாரின் கூற்றையே அவர்கள் ஏற்கவில்லை, ஏனெனில் அது படைத்தவனின் கட்டளையாக நபிகளார் கூறாததுதான்.
இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தும் கூட, அவர்களின் சொந்தக் கூற்றைக் கூட ஏற்று நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் இவ்வுலகத்தில் வாழும் மற்றவர்களின் கூற்று எவ்வளவு மதிப்புடையாத இருக்கும்?
ஆனால் இன்று ஷைக், மூரீத்- இமாம்கள் என்ற பெயரில் மனிதனை பக்குவபடுத்துகிறோம் என சில போலி ஷைக்மார்கள் உலா வருகின்றனர். அவரிடம் பைஅத் (உடன்படிக்கை) எடுத்துவிட்டால் அவர் சொன்ன அடிப்படையில்தான் நாம் நடக்க வேண்டுமாம். திருமணம் மற்று ஏனைய அனைத்துக் காரியங்களையும் அவரிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டுமாம். இப்படி பலர் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் நபிகளார் சொந்தக் கூற்றாக சொன்ன விசயத்தை ஏற்க மறுத்தார்கள், அதற்காக நபிகளார் கோபப்படவில்லை. நபிகளாரின் கூற்றைக் கூட நாம் இவ்விசயத்தில் ஏற்க வேண்டியதில்லை நம் விருப்படி நடக்கலாம் என்றால் இன்று ஷைகுமார்கள் இமாம்கள் எம்மாத்திரம் ? சிந்தித்துப்பாருங்கள் என்று மக்களின் சிந்தனையில் உறைக்கு முகமாக அவரது உரையில் கேள்வி எழுப்பினார்.
மார்க்க விசயத்தில் பரீரா (ரலி) அவர்களைப் போன்று இன்றைய பெண்களும் ஆண்களும் திகழ்ந்தால் மொத்த மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து திருக்குர்ஆன் நபிமொழிகளின் அடிப்படையில் ஓரிறைக் கொள்கைகளை இலகுவாக நிறைவேற்றிவிடலாம் என்று தவ்ஹீதின் பக்கம் அழைப்புவிடுத்தார்.
இவ்வாறான, வலுவான ஆதாரங்களை முன்வைத்து, மிக எளிமையாக, சிறு குழந்தைக்கும் விளங்கும் வகையில் அவரது உரையை பீஜே அவர்கள் அமைத்திருந்தார்கள் என்பதை அந்த உரையைக் கேட்ட அறிவுடைய யாரும் மறுத்துரைக்க முனைய மாட்டார்கள்.
எனவே, அவரின் வலுவான ஆதார உரைக்குப் பதில் அளிக்க முடியாத சில சில்லரைகளும் அரைகுறைகளும் தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஆரம்பித்தனர்.
அதில், பொருத்தமில்லாத விமர்சனங்களுக்கு மத்தியில் மிகவும் பொருத்தமற்ற  ஒரு விமர்சனத்தை M.A.M மன்சூர் (நளீமி) என்பார் முன்வைத்தார். அதற்கு மறுப்பாகவே இவ்விமர்சனம் அமைகிறது.
2001ம் ஆண்டு PJ யை தேடிச் சென்று பட்ட குட்டின் வலிவுடைய முணகல் ஒலி இங்கு மேடையில் வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது.  PJயை சந்தித்த போது, அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் மவுனியாகஇருந்துவிட்டு, வெளியே வந்து, PJ  சென்ற பின்னர், “எங்களிடம் 20க்கும் மேற்பட்ட பதில்கள் இருந்தன. நாங்கள் ஏன் சொல்லவில்லை தெரியுமா? அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்ததுஎன்று சில குருட்டு பக்தர்கள்கொக்கரித்தனர். இதுவரை அந்த 20 இரகசிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்படுத்தினால் நாமும் பரிசீலிக்கலாம். ஆதாரத்தை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு தங்கள் பலவீனத்தையும் தவறான கொள்கைகளையும் மறைப்பதற்காகவும் இருக்கின்ற ஒன்றிரண்டு பைஅத்வாதிகளைத் தக்க வைப்பதற்காகவும் வதந்திகளையும் அவதுhறுகளையும் பரப்பி வருகின்றனர். சருகைக் கொண்டு தணலை மூட முனையும் இவர்களது மூடத்தனத்திற்கு எப்போது தான் விடிவு கிடைக்குமோ?!
ஒரு தனிமனிதரிடம் தனது மூளையை அடகு வைத்த, இரகசிய பைஅத் செயற்பாட்டு இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் வந்து: உஸ்தாத் (?) சென்ற நோன்பில் PJ   ஐயும் அவர் தர்ஜமாவையும் பிச்சு (விமர்சித்து) வீசினார்என்று கூறினார்.
அவருக்கு நான் கூறினேன்: அந்த விமர்சனம் எவ்வளவு தூரம் நேர்மையானது என்பது பரிசீலனைக்குகுரியது. ஏனெனில், எம்.ஏ.எம்.மன்ஸூர் என்பவர், நவீன இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடியும், ஏகத்துவக் கொள்கையை கடுகளவும் விட்டுக்கொடுக்காமல், ஓர் ஸ்திரமான இஸ்லாமிய அரசை உருவாக்கப் பாடுபட்ட இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) பற்றி நேர்மையற்ற முறையில், உண்மைக்கு மாற்றமாக மீள்பார்வையில் எழுதியிருந்தார். அவ்வாறே, PJ விடயத்திலும் அவா; அதே வழிமுறையையே கையாண்டார்.
இவர் போன்ற நேர்மையற்ற விமா;சகர்களின் விமர்சனங்களுக்கப்பால், அவரின் தர்ஜுமா மாற்றாரும் விளங்கும் வகையில், மிக எளிமையாக, இதுவரை தமிழில் யாரும் செய்யாத முறைமையில் மிக அருமையாக அமைந்துள்ளது. (அதனால்தான், சில சில்லறைகளுக்காக இன்னொரு தர்ஜமா செய்யும் சில உள நோயாளிகள்”; கூட அதையே பிரதிபண்ணிக் கொண்டிருக்கின்றனர். இக்கூட்டம் ஏற்கனவே அரபு நாட்டுக் கரன்சிக்கா செய்த தர்ஜமாவில் அத்வைதக் கொள்கை சார்ந்த வசனங்கள் இதுவரை திருத்தப்படாமல் இன்றும் வினியோகிக்கப்படுகின்றன. அதில்  பல நுhறு தவறுகள் உள்ளன.)
Pது வுடைய தர்ஜமா அல்லாஹ்வின் மிகப் பெரிய அருளால் சில ஆண்டுகளுக்குள் 12வது பதிப்பைக் கண்டுவிட்டது. மக்களின் விரிவான வாசிப்பையும் பலமான ஆதரவையும் பெற்றுள்ளது. சில அதிகார வெறியர்களையும், சுயமரியாதையை அடகு வைத்த முள்ளுப் பொறுக்கிகளையும், இஸ்லாத்தை விற்றேனும் இயக்கத்தைக் காப்பாற்ற நினைப்பவா;களையும், மார்க்கத்தை அடகு வைத்தேனும் ஆட்சி பிடிக்க கனவு காணும் கற்பனைக் கனவுலக வாதிகனையும் தவிர, மற்ற அனைவரும் அதனை வரவேற்றுப் பாராட்டினர். இம்மகத்தான பணியை ஆற்றியமைக்கு அவருக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிராத்திக்கின்றனர்.
ஆனால், அடோல்ப் ஹிட்லர்  மாதிரி மீசை வைத்திருந்த செய்யித் குதுபின் في ظلال القرآن  உள்ள,      மவ்லானா மவ்தூதியின்  تفهيم القرآ ن    உள்ள, அஜமி - ஊமையன் - கண்ட அல்குர்ஆனில் உள்ள மிகப் பாரதுாரமான தவறுகளுடன் ஒப்பிடும் போது, PJ தர்ஜுமாவில் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில பனங்காட்டு நரிகள் ஊளையிடுவது போன்ற தவறுகளை அதில்  காண முடியவில்லை. மனிதன் என்ற வகையில் அதில் தவறு இருக்கவே செய்யும்.
 ஹிட்லர் மீசை செய்யித் குதுபின் மிகப் பாரதுhரமான தவறுகளின் பட்டியலை, மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல்லாஹ் ரபீவு ஹாதி அல் மத்கலி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். 
மன்சூரை மகாஞானியாகக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்த அவரிடம்: ரமழான் என்பது ஆன்மீக உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும் ஓர் அரிய சந்தர்ப்பம். அதில், அதிகளவு இபாதத்தான் செய்ய வேண்டும். காத்திரமான பணிகளை காழ்ப்புணர்வுடன் அணுகி, வக்கிரங்களை வெளிப்படுத்தி, புனிதமான ஒரு மாத காலத்தையும், மற்றவர்களின் பெறுமதியான அமல்செய்யும் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தினேன். அப்போதுதான், அவருக்கு தனது ஒரு மாதகால இபாதத்பாழ்படுத்தப்பட்டதை உணர்ந்து, கையை பிசைந்து கொண்டார்.
  இனி, PJயின் தர்ஜமா தொடர்பாக M.A.M மன்சூர் (நளீமி) வைத்த விமர்சனங்களுக்கு தர்ஜமாவிலேயே பதில்கள் உள்ளன. அவற்றை இங்கே தருகின்றோம். இவ்வட்டவணை தொடர்பாக M.A.M மன்சூர் என்பார்: “பிழையாக எழுதப்பட்டுள்ளதில் இசை அமைப்பு உள்ளது. எகிப்து, ஸவூதி அறபு அறிஞர்களுக்கு விளங்காத இது எப்படி தென்னிந்திய அறிஞருக்கு விளங்கியது?” என்று உலகில் யாரும் இதுவரை கேட்காத அறிவுபூர்வமான(?) கேள்வியை எழுப்பியிருந்தார்.  
இங்கு எழுத வேண்டிய முறை  என்று பீஜே குறிப்பிட்டவாறு சில குர்ஆன்களில் உள்ளமை அவசரக் குடுக்கையில் இவர் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டது. யாரும் சொன்னதில்லை என்கிறார். ஆசியாவில் தன்னைவிட தப்ஸீர் கலை அறிவாளி யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு தமிழில் வந்த நிஜாமுத்தீனின் தர்ஜமாக் கூடத் தெரியவில்லை. அவரும் அவரது தர்ஜமாவில் எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியுள்ளார். இது இவருக்குத் தெரியவில்லை. தமிழ் தர்ஜமா தெரியாத இவர் அறபியிலும் இல்லை என்று புருடா விடுகின்றார்.
மன்சூருக்கு பிஜே அவர்கள் அளித்த மறுப்பைக் காண இங்கு கிளிக் பண்ணவும். 
 பீஜேயின் தமிழாக்கம் பற்றி இலங்கை உஸ்தாத் மன்சூர் என்பவர் செய்த விமர்சனங்களுக்கு மறுப்பும் விளக்கமும். ஏழு பாகங்கள் உள்ளன. அவரது விமர்சினத்தைக் கேட்டால்  உஸ்தாத் மன்சூர் என்பவருக்கு அல்குர்ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை என்பது புலனாகிறது.
பீஜேவுடைய தர்ஜமாவில் உள்ள குறிப்புக்களை இங்கு தந்துள்ளேன்.
எழுத்துப் பிழைகள் 
 திருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். உஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்ட போது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர். இவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை உலக முஸ்லிம் சமுதாயம் அப்படியே தக்கவைத்து வருகின்றது. ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும். இது போன்ற சில எழுத்துப் பிழைகளை இங்கே நாம் எடுத்துக் காட்டுகிறோம். லில்லதீன என்பது திருக்குர்ஆன் முழுவதும் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 70:36 வசனத்தில் மட்டும் பிழையாக அலிப் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. 21:88 வசனத்தில் நுன்ஜி எனும் சொல் நுஜி என்று எழுதப்பட்டுள்ளது. இதை மக்கள் அப்படியே வாசித்துவிடக் கூடாது என்பதற்காக மேலே சிறிய நூன் எழுத்து பிற்காலத்தில் எழுதப்பட்டது. அஃபஇன் என்ற சொல் 3:144, 21:34 ஆகிய வசனங்களில் அஃபா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை அஃபஇன் என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். 3:158 வசனத்தில் லா இலல்லாஹி என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் ல இலல்லாஹி என்று தான் இதை வாசிக்கவும் எழுதவும் வேண்டும். 37:68 வசனத்தில் லா இலல் ஜஹீம் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல இலல் ஜஹீம் என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும். 5:29 வசனத்தில் தபூஆ என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது பிழையாகும். இதை தபூஅ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். 7:103, 10:75, 11:97, 23:46, 28:32, 43:46 ஆகிய வசனங்களில் மலாயிஹி என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை மலயிஹி என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும். 9:47 வசனத்தில் வலா அவ்லவூ என்று பிழையாக எழுதியுள்ளனர். ஆனால் வல அவ்லவூ என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். ஸமூத என்ற சொல் 7:73, 11:61, 17:59, 27:45, 51:43 ஆகிய வசனங்களில் ஸமூத என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:68 வசனத்தில் இச்சொல் இரு இடங்களில் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் ஸமூதா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஸமூத என்றுதான் இதை எழுதவும், வாசிக்கவும் வேண்டும். ஷைஇன் என்ற சொல் எல்லா இடங்களிலும் சரியாக எழுதப்பட்டுள்ள போதும் 18:23 வசனத்தில் மட்டும் ஷா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஷைஇன் என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். 18:14 வசனத்தில் நத்வுவ என்று எழுதுவதற்குப் பதிலாக நத்வுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை நத்வுவ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். லாகின்ன என்ற சொல்லை 18:38 வசனத்தில் லாகின்னா என்று பிழையாக எழுதியுள்ளனர். இதை லாகின்ன என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். 13:30 வசனத்தில் லி தத்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி தத்லுவ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். 27:21 வசனத்தில் லா அத்பஹன்னஹு என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ல அத்பஹன்னஹு என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும். 47:4 வசனத்தில் லியப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி யப்லுவ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். 59:13 வசனத்தில் லா அன்தும் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல அன்தும் என்று தான் எழுதவும் வாசிக்கவும் வேண்டும். கவாரீர என்ற சொல் 76:16, 27:44 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 76:15 வசனத்தில் கவாரீரா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை கவாரீர என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். ஸலாஸில என்ற சொல் 76:4 வசனத்தில் ஸலாஸிலா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஸலாஸில என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும். 47:31 வசனத்தில் நப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை நப்லுவ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும். அல்ஐகத் என்ற சொல் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 26:176, 38:13 வசனங்களில் அலிபை விட்டு விட்டு பிழையாக எழுதியுள்ளனர். ஷுரகாவு என்ற சொல் 4:12, 7:190, 39:29 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்தச்சொல் 6:94, 42:21 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. லுஅஃபாவு என்ற சொல் 2:226 வசனத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14:21, 40:47 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நபயி என்ற சொல் 6:67, 28:3, 76:2 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் 6:34 வசனத்தில் இறுதியில் யே எனும் எழுத்து பிழையாக சேர்க்கப்பட்டுள்ளது. வராயி என்ற சொல் 2:101, 11:71, 33:53 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது ஆனால் 42:53 வசனத்தில் இறுதியில் யே எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நஷாவு என்ற சொல் 8:31, 6:83 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:87 வசனத்தில் இறுதியில் அலிப் எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. என்ற சொல் 13:26, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12, ஆகிய வசனங்களில் என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2:245வது வசனத்தில் மட்டும் இச்சொல் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக "ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர். என்ற சொல்லை 2:247 வசனத்தில் சரியாக எழுதியுள்ளனர். ஆனால் 7:69 வசனத்தில் என்று பிழையாக எழுதியுள்ளனர் என்று "ஸீன்' எழுதுவதற்குப் பதிலாக என்று "ஸாத்' எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம். இதுபோல் இன்னும் சில சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூலப் பிரதியில் சரியாகவே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமான மனிதர்களுக்கும் ஏற்படும் பிழைகள் தான். குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, இது மனிதர்களின் செயல் என்பதுதான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது. எழுத்தர்கள் இவ்வாறு பிழையாக எழுதியுள்ளனர் என்ற கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொழியியல் வல்லுனரும் மார்க்க மேதையுமான இப்னு குதைபா, இப்னு கல்தூன், இமாம் பாகில்லானி, இமாம் உஸ்புஹானி, உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் எழுத்தர்கள் பிழையாக எழுதியுள்ளதால் குர்ஆனுடைய பாதுகாப்புத் தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. எழுத்து வடிவில் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகி விடாது. திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும் போது "கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது'' என்று குறிப்பிடுகிறது. (திருக்குர்ஆன் 29:49) தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும்போது சரியாக வாசிக்கிறார்கள். இந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது குர்ஆனைப் பாதுகாப்பதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு இருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. இதனால் தான் ஊருக்கு ஒரு குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு குர்ஆன் என்று குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு குறைபோல தோன்றினாலும், உண்மையில் குர்ஆனில் யாரும் கை வைப்பதை இந்தச் சமுதாயம் அனுமதிக்காது என்பதைக் காட்டுவதற்கான சான்று எனலாம். அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்து குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும். திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும் போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களில் மாற்றம் ஏற்படும்; அமைப்புகளில் மாற்றம் ஏற்படும்; பேச்சு வழக்குகளில் மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படுவது தான். அத்தகைய மாற்றங்கள் அரபுமொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபுமொழி தெரிந்தவரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்த மாறுதலால் குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது. ஏனென்றால் குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது. இறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள். இறைவனிடமிருந்து குர்ஆன் நபிகளுக்கு வந்த போது ஒலி வடிவமாகத்தான் வந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது. இன்றைக்கும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது. தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார். அதே போல் தான் அரபுமொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை. இதனால் தான் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49). நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழி என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம். அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளி உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளி உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன. அரபுமொழியில் ஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத்தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும். ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்கு புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத்தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள். இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அரபுமொழியின் பொருள் தெரியாமலே இறைவேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற மக்கள் பெருகிய போது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை இனம் காட்டினார்கள். புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது. குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபுமொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல். உயிர் மெய்க் குறியீடுகள் தமிழ் மொழியில் "க' என்று எழுதினால் பார்த்தவுடனே வாசிக்க முடியும். "கீ' என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை "கீ' என வாசிக்க முடியும். "கு' என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை "கு' என்று வாசிக்க முடியும். ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் கண்டு கொள்வார்கள். ஆயினும் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் தெரியாதவர்களும் குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்ட போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய் குறியீடுகள் (ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன. இந்த வேறுபாடுகள் எல்லாம் மூலப் பிரதியில் இருக்காது. அதில் க, கி, கு, க் என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். இந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய்க் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள். அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதிடக் கூடாது. குர்ஆனை முடிக்கும் துஆ தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப் பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மேலும் இதன் பொருளை அறிந்து கொண்டால் இப்பிரார்த்தனை குர்ஆனுடன் விளையாடும் வகையில் அமைந்துள்ளதை யாரும் அறியலாம். உதாரணமாக "கதவு'' என்ற சொல்லை நாம் கூறுகிறோம். கதவு என்பதில் "க' வைக் கூறியதற்காக கஞ்சியையும், "'’வைக் கூறியதற்காக தண்ணீரையும், "' வைக் கூறியதற்காக உணவையும் "தா' என்று கூறினால் அது எத்தகைய தரத்தில் அமையுமோ அது போன்ற தரத்தில் தான் இந்தப் பிரார்த்தனையும் உள்ளது. "ஜீம்'' என்ற எழுத்தை ஓதியதால் ஜமால் (அழகை) தா! "ஹா' என்ற எழுத்தை ஓதியதால் "ஹிக்மத்' (அறிவு) தா என்று ஒவ்வொரு எழுத்தையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் வேறொரு வார்த்தையின் பொருளை அல்லாஹ்விடம் கேட்கும் வகையில் இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது. ஜீம் என்ற எழுத்து ஜமால் என்பதற்கு மட்டும் முதல் எழுத்தாக இல்லை. ஜஹ்ல் (மடமை) என்பதற்கும் முதல் எழுத்தாகவுள்ளது. மேலும் "ஜீம்' என்பதற்கு ஜமாலைத்தான் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகும். எனவே இந்த துஆவை அச்சிடுவது மட்டுமின்றி அதை வாசிப்பது பாவமாகவும், குர்ஆனுடன் விளையாடியதாகவும் அமையும்.

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/

அல்குர்ஆனில் எழுத்துப் பிழைகளா? என்ற தலைப்பில் ஒரு விவாதமும் நடைபெற்றது.மேலதிகமாக அறிய விரும்புபவர்கள் அந்த விவாதத்தைப் பார்க்கவும்.
குர்ஆனில் எழுத்து பிழைகளா குர்ஆனில் எழுத்து பிழைகளா என்ற தலைப்பில் தூத்துகுடியில் 29,30-9-2012 ஆகிய இறு தினங்களில் நடைபெற்ற விவாதம்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/
Copyright © www.onlinepj.com
குர்ஆனில் எழுத்து பிழைகளா குர்ஆனில் எழுத்து பிழைகளா என்ற தலைப்பில் தூத்துகுடியில் 29,30-9-2012 ஆகிய இறு தினங்களில் நடைபெற்ற விவாதம்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/
Copyright © www.onlinepj.com
  குர்ஆனில் எழுத்து பிழைகளா என்ற தலைப்பில் தூத்துகுடியில் 29,30-9-2012 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற விவாதம்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/
Copyright © www.onlinepj.com
      http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/ 
குர்ஆனில் எழுத்து பிழைகளா குர்ஆனில் எழுத்து பிழைகளா என்ற தலைப்பில் தூத்துகுடியில் 29,30-9-2012 ஆகிய இறு தினங்களில் நடைபெற்ற விவாதம்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/
Copyright © www.onlinepj.com
குர்ஆனில் எழுத்து பிழைகளா குர்ஆனில் எழுத்து பிழைகளா என்ற தலைப்பில் தூத்துகுடியில் 29,30-9-2012 ஆகிய இறு தினங்களில் நடைபெற்ற விவாதம்

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/bayan-video/vivathangal/Quranil-Eluthu-Pilaigala-Vivatha-Video/
Copyright © www.onlinepj.com
(“அறிவுக்கு பொருந்தா - முட்டாள்தனமான - பயனற்ற - பொருத்தமற்ற சூழலில் காரியமாற்றுவோரையும், தொடர்பில்லாது விமர்சிப்போரையும் தும்பை விட்டு வாலைப் பிடிப்போர் என்று குறிப்பிடுவது வழக்கம். இவர் நியாஸ் மவ்லவி மேடையில் ஏறுவது சரியா தவறா என்று முடிவெடுக்க முடியாமல் தடமாறியதான உரையின் துவக்கத்தில் சொல்கிறார். அதனால்தான் இந்த தலைப்பை இட்டோம்.)






Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger